Published : 24 Feb 2021 03:19 AM
Last Updated : 24 Feb 2021 03:19 AM

மணிகண்டீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்

நெமிலி அடுத்த திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோயிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் அஞ்சனாக் ஷி சமேத மணிகண்டீஸ்வரர்.

அரக்கோணம்

திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டத்துக்கு உட்பட்ட திருமால்பூர் கிராமத்தில் அஞ்ச னாக் ஷி சமேத மணிகண்டீஸ் வரர் கோயில் உள்ளது. பாடல் பெற்ற தலமான இங்கு பிரம்மோற்சவ விழா கடந்த 17-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி யது. பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான நேற்று தேர் திருவிழா வெகு விமரிசையாக தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மேலும், தேர் திருவிழாவில் பக்தர்கள் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை செலுத்தி சுவாமியை தரிசனம் செய்தனர். வரும் 26-ம் தேதி தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் விழா நிறைவு பெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x