Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வைக் கண்டித்து கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் திமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு, திமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., சி.ஆர்.ராமச்சந்திரன், ஆர்.கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி தலைமை வகித்தனர். திமுக சொத்து பாதுகாப்புக் குழு துணைத் தலைவர் பொங்கலூர் நா.பழனிசாமி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலையைக் குறைக்க வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக கோவை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமை வகித்தார்.

பொள்ளாச்சி எம்.பி. சண்முக சுந்தரம், விவசாய அணி மாநில துணைத் தலைவர் தமிழ்மணி, நெசவாளர் அணி மாநிலச் செயலர் கே.எம். நாகராஜன், நகரப் பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருப்பூர்

திருப்பூர் குமரன் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மத்திய மாவட்டப் பொறுப்பாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். இதேபோல, வீரபாண்டி பிரிவு அருகே மாவட்டப் பொறுப்பாளர் இல.பத்மநாதபன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உடுமலை

உடுமலை மத்தியப் பேருந்துநிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர்இரா.ஜெயராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.

பொள்ளாச்சி எம்.பி. கு.சண்முகசுந்தரம், நகரச் செயலர் மு.மத்தின் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

உதகை

உதகை ஏடிசி சுதந்திர திடல்முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் துக்கு திமுக மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக் தலைமை வகித்தார்.

தேர்தல் பணிக் குழுச் செயலாளர் க.ராமசந்திரன், கூடலூர்எம்எல்ஏ மு.திராவிடமணி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x