Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM
நாமக்கல்: வீட்டுமனை வழங்க வேண்டும், மைக்ரோ பைனான்ஸ் கடன் தள்ளுபடி செய்யவேண்டும் மற்றும் கூலி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமாரபாளையம் எம்எல்ஏ அலுவலகத்தை தொழிற்சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்எல்) மாவட்ட செயலாளர் பொன்.கதிரவன் தலைமை வகித்தார். தொடர்ந்து விசைத்தறி, கைத்தறி உள்பட அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் வீ்ட்டுமனை, மைக்ரோ பைனான்ஸ் கடன் தள்ளுபடி மற்றும் கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி கோஷமிட்டனர். முன்னதாக தொழிற்சங்கத்தினர் ஊர்வலமாக வந்தனர். தொழிற்சங்க நிர்வாகிகள் சுப்பிரமணி, மாணிக்கம், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT