Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

மதுரை நகரில் 19 எஸ்.ஐ.கள் பணியிட மாற்றம்

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி காவல் அதிகா ரிகள் மாற்றப்படுகின்றனர்.

இதன்படி, மதுரையில் நீண்ட நாட்களாகப் பணிபுரிந்த எஸ் .ஐ.கள் பணியிடமாற்றம் செய் யப்பட்டுள்ளனர்.

விளக்குத்தூண் எஸ்.ஐ. பாண்டியராஜன் திருப்பாலை காவல் நிலைய குற்றப்பிரிவுக் கும், விளக்குத்தூண் எஸ்.ஐ. ஜெயமாணிக்கம் திலகர் திடல் குற்றப்பிரிவுக்கும், தெப்பக்குளம் எஸ்.ஐ. அன்புதாசன் சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கும் மாற் றப்பட்டுள்ளனர்.

சுப்ரமணியபுரம் எஸ்.ஐ. கிருஷ்ணமூர்த்தி செல்லூர் குற் றப்பிரிவுக்கும், திலகர்திடல் எஸ்.ஐ. சுந்தரேசுவரன் மாட்டுத் தாவணி குற்றப்பிரிவுக்கும், கரி மேடு எஸ்.ஐ. சுந்தரபாண்டியன் தெப்பக்குளம் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கும், தல்லாகுளம் எஸ்.ஐ. பாலமுருகன் விளத்துக்குத்தூண் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கும், தல்லாகுளம் எஸ்.ஐ. மோக ன்தாஸ் அண்ணா நகர் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கும், தல் ாகுளம் எஸ்.ஐ. சுந்தரராஜன் சுப்ரமணி யபுரம் குற்றப் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

செல்லூர் எஸ்.ஐ. தரன் சுப்ரமணியபுரம் குற்றப் பிரிவுக்கும், கூடல்புதூர் பிரேம்சந்திரன் தல்லாகுளம் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

கூடல்புதூர் எஸ்.ஐ. அழகு முத்து அண்ணா நகருக்கும், அண்ணா நகர் மணிமாறன் விளக்குத் தூண் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கும், அண்ணா நகர் பாலமுருகன் சுப்ரமணியபுரம் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கும், அண்ணா நகர் எஸ்.ஐ. ரீகன் கரிமேடு சட்டம், ஒழுங்கு பிரிவுக்கும், திருப்பரங்குன்றம் எஸ்.ஐ. திருக்கண்ணன் எஸ்.எஸ். காலனி சட்டம்,ஒழுங்கு பிரிவுக்கும், எஸ்.எஸ். காலனி தயாநிதி அண்ணா நகர் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கும், மீனாட்சி கோயில் எஸ்.ஐ. செல்வகுமாரி தெற்குவாசல் மகளிர் காவல் நிலையத்துக்கும், கீரைத்துறை எஸ்.ஐ. ராமலிங்கம் தெற்குவாசல் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இத்தகவல் காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x