குடிசை மாற்று வாரிய கடனை தள்ளுபடி செய்யக் கோரிக்கை

குடிசை மாற்று வாரிய கடனை தள்ளுபடி செய்யக் கோரிக்கை
Updated on
1 min read

தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய தனிநபர் திட்டப் பகுதியில் உள்ள சுமார் 1 லட்சம் பயனாளிகளின் கடன் மற்றும் வட்டியை தள்ளுபடி செய்யக் கோரி, சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் (மாலெ) கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் வேல்முருகன், மத்திய கமிட்டி உறுப்பினர் சந்திரமோகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய தனிநபர் திட்டப் பகுதிகளில் உள்ள சுமார் 1 லட்சம் பயனாளிகளின் கடன், வட்டிகளை தள்ளுபடி செய்ய வேண்டும். அந்த இடத்துக்கான பட்டா, கிரயப் பத்திரம் வழங்க வேண்டும். அதற்கான அறிவிப்பை நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே வெளியிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in