Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM
திருச்சி: திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் பங்குனி பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, சுவாமி, அம்மன், விநாயகர், சோமஸ்கந்தர், பிரியாவிடை அம்மன் ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் காலை 6.40 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரம் அருகே எழுந்தருளினர். கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. காலை 7.15 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனித் தேரோட்டம் மார்ச் 16-ம் தேதி நடைபெறுகிறது.ஏப்ரல் 1-ம் தேதி மண்டலாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT