Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

அரியலூர் மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றவழக்குகளில் ஈடுபட்ட, திருச்சி மாவட்டம் மணக்கால் கிராமத்தை சேர்ந்த காத்தான்(57), சின்னநாகலூரைச் சேர்ந்த சத்தியமூர்த்தி(54) ஆகியோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இதேபோல, அரியலூர் மாவட்டம் இலையூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன்(23) என்பவர் சிறுமியை திருமணம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மாவட்ட எஸ்பி வி.பாஸ்கரன் பரிந்துரையின் பேரில் 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க ஆட்சியர் த.ரத்னா நேற்று உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x