Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து திமுகசார்பில், தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாதன் தலைமை வகித்தார். திருச்சி சிவா எம்.பி., முன்னாள் அமைச்சர் தங்கவேலு மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

வாசுதேவநல்லூரில் மாவட்ட பொறுப்பாளர் ஆ.துரை, எம்பி தனுஷ் எம்.குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கம் அருகில் நடைபெற்றஆர்ப்பாட்டத்துக்கு, திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் ஏ.எல்.எஸ்.லெட்சுமணன், டி.பி.எம்.மைதீன்கான் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா உள்ளிட்ட திமுகவினர் 2 குதிரைவண்டிகளில் வந்தனர். சேரன்மகாதேவியில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், ஞானதிரவியம் எம்.பி. உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் பெ.கீதாஜீவன் எம்எல்ஏ தலைமை வகித்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில்திருச்செந்தூர் பேருந்து நிலையம்அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை வகித்தார்.

நாகர்கோவில்

நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ தலைமை வகித்தார். ஆஸ்டின் எம்எல்ஏ மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர். கன்னியாகுமரி மேற்குமாவட்ட திமுக சார்பில் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மனோதங்கராஜ் எம்எல்ஏ தலைமை வகித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x