Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

மக்கள் குறைதீர் கூட்டம் தென்காசியில் 675 பேர் மனு

தென்காசி

தென்காசியில் ஆட்சியர் சமீரன் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 675 பேர் மனு அளித்தனர். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, கோட்டாட்சியர் ராமசந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மரகதநாதன், காவல் துணை கண்காணிப்பாளர் பாலாஜி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x