Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM
நடப்பாண்டு சிறந்த காளையாக தேர்வான சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் காளைக்கு முதல் பரிசாக மாருதி கார் வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசாக ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் ராஜசேகர் காளைக்கு மோட்டார் சைக்கிளும், மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த அன்பு என்பவரது காளைக்கு மூன்றாவது பரிசாக ஸ்கூட்டரும் வழங்கப்பட்டது.
இதேபோல, 15 காளைகளைப் பிடித்த, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷுக்கு மாருதி காரும், 13 காளைகளைப் பிடித்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக்கு மோட்டார் சைக்கிளும், 11 மாடுகளைப் பிடித்த திண்டுக்கல் நத்தத்தைச் சேர்ந்த கார்த்திக்குக்கு ஸ்கூட்டரும் பரிசாக வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT