Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு

பொள்ளாச்சி

பொள்ளாச்சி வெள்ளாளபாளையம் அருகே உள்ள தொப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமார் என்ற அருண்குமார் (35) கூலித் தொழிலாளி. குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு குமார், குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதனை மனைவி கண்டித்ததால், வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி குமார் தீ வைத்துக் கொண்டார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்குப்பின், கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் உயிரிழந்தார்.

இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x