18,550 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

18,550 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
Updated on
1 min read

திருவள்ளூர் அருகே தாமரைப்பாக்கம் அடுத்த காரணிபாட்டை பகுதியில் உள்ள தனியார் சேமிப்புக் கிடங்கில் எரி சாராயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு நேற்று மாலை ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, டிஎஸ்பி தெட்சிணாமூர்த்தி தலைமையிலான, போலீஸார் சம்பவ இடம் விரைந்து, சோதனையில் ஈடுபட்டனர்.

அச்சோதனையில், தனியார் சேமிப்புக் கிடங்கில் தலா 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 530 எரிசாராய கேன்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, 18,550 லிட்டர் எரி சாராயத்தை கொண்ட அக்கேன்களை போலீஸார் பறிமுதல் செய்ததோடு, இதுதொடர்பாக, சென்னை- அம்பத்தூரை சேர்ந்த ராஜ்குமார்(35), வெங்கடேசன்(33), பாபு(34), ராயபுரம் ஆரிஸ்(42), திருவொற்றியூர் ரவி(38) மற்றும் திருமுல்லைவாயல் மதன்(42) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஐஜி செந்தாமரைக்கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in