Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

புதுச்சேரியில் புதிதாக23 பேருக்கு கரோனா தொற்று மேலும் ஒருவர் உயிரிழப்பு

புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் நேற்று வெளியிட்ட தகவல்:

புதுச்சேரி மாநிலத்தில் 1,273 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 11, காரைக்காலில் 5, மாஹேவில் 7 என மொத்தம் 23 பேருக்குகரோனா தொற்று கண்டறியப்பட் டுள்ளது. ஏனாமில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை. மேலும், புதுச்சேரி தேங்காய்திட்டு பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண் தொற்றால் பாதிக்கப்பட்டு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தோர் எண்ணிக்கை 663 ஆகவும், இறப்பு விகிதம் 1.67 ஆகவும் உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இது வரை 39,592 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் 105 பேரும்,வீடுகளில் தனிமைப்படுத்தப்பட் டோர் 87 பேரும் என மொத்தம் 192 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 18 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதனால் குண மடைந்தோர் எண்ணிக்கை 38,737 (97.84 சதவீதம்) ஆக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x