Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

உலக தாய்மொழி நாள் விழா சங்கப்புலவர்கள் நினைவு தூணுக்கு மாலை

கரூர்: உலக தாய்மொழி நாள் விழாவையொட்டி நச்செள்ளை தமிழ்ப்பேராயம், கரூர் வரலாற்று சங்கம் ஆகியவற்றின் சார்பில் தமிழ்ப்பேராய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ந.ஸ்டாலின் தலைமையில் கரூர் சங்கப்புலவர்கள் நினைவு தூணுக்கு நேற்று மாலை அணிவித்து, புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழ் வாழ்க, தமிழில் கையெழுத்திடுவோம் என முழக்கமிட்டதுடன், தமிழ்மொழிக் கல்வியின் அவசியம் குறித்து விளக்கினர். தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த தானம் வழங்கினர். திலீப், இலங்கேஷ், சசிகிருஷ்ணன், ஓகேஆர்எஸ் பவன், கருவூர் வரலாற்று சங்கம் செந்தில், காளிரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x