Published : 22 Feb 2021 03:18 AM
Last Updated : 22 Feb 2021 03:18 AM

பாதாள சாக்கடையை சீரமைக்கக்கோரி எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

மேலப்பாளையம் 33-வது வார்டுக்கு உட்பட்ட கொட்டிகுளம் ரோடு, ரப்பானி பஜாரில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் செல்ல வழியில்லாமல் வெளியேறியதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்டிபிஐ கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் அப்பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் காதர் மீரான், செய்யது, ராயல் அமீர் சுல்தான், செய்யது மசூது மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக அங்கு வந்து பாதாள சாக்கடையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x