Published : 22 Feb 2021 03:18 AM
Last Updated : 22 Feb 2021 03:18 AM
கோவில்பட்டியில் அரசு ஓய்வூதியர்கள் சங்க 34-ம் ஆண்டு விழா நடந்தது. சங்கத் தலைவர் அய்யலுசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் மணிகண்டன், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க தூத்துக்குடி மாவட்டத் தலைவர் சங்கர நாராயணன், அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர்கள் சங்க அமைப்புச் செயலாளர் சண்முக சுந்தரராஜ் ஆகியோர் பேசினர். செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 50 சதவீதத்தில் இருந்து 67 சதவீதமாக உயர்த்த வேண்டும். மருத்துவப்படி ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு ஓய்வுகால பலன்களை உடனே வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT