ரவுடி கொலையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் 3 பேர் சரண்

ரவுடி கொலையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் 3 பேர் சரண்
Updated on
1 min read

கடலூர் ரவுடி கொலையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் 3 பேர் நேற்று சரண் அடைந்தனர்.

கடலூர் பூந்தோட்டத்தைச் சேர்ந்தவர் ரவுடி வீரா என்ற வீராங்கன் (35). இவர் கடந்த16-ம் தேதி இரவு திருப்பாதிரிப்புலியூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தலைத் துண்டித்துக் கொலை செய்யப் பட்டார். இதுதொடர்பாக திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். இதற்கிடையே வீரா கொலை வழக்கில் கடலூர் குப்பங்குளத்தைச் சேர்ந்த ரவுடி கிருஷ்ணா என்பவர் பிடிபட்டார். அவர் பண்ருட்டியை அடுத்த குடுமியான்குப்பம் அருகே எஸ்ஐயை தாக்கி விட்டு, தப்பிக்க முயன்ற போது போலீஸால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

இந்நிலையில் வீரா கொலை வழக்கில் தொடர்புடைய கடலூர் குப்பன் குளம் பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் (30), ஸ்டீபன் ராஜ் (26), ஜீவா (20) ஆகிய 3 பேர் நேற்று விழுப்புரம் இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் பூர்ணிமா முன்பு சரணடைந்தனர். இவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in