தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தினர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தினர்.
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற ஊழியர் சங்க பொதுச் செயலாளர் பத்ராச்சலம் வரவேற்றார். தொடக்கக் கூட்டுறவு கடன் சங்கங்களில் ஓய்வு பெற்ற ஊழியர்களும் பயன்பெறும் வகையில், ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பொது விநியோக திட்ட ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும்.

ஆட்கள் பற்றாக்குறை காரண மாக வெளியாட்கொணர்வு அடிப்படையில் பணியாற்றும் கணினி ஊழியர்களுக்கு குறைந்த பட்ச தின ஊதியத்தை கணக்கீடு செய்து ஊதியம் வழங்க வேண்டும். தகுதியுள்ள ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன செய லாளர் உதயகுமார், துணைத் தலைவர்கள் ஜோதிமணி, சந்தானம், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில், மாவட்டப் பொருளாளர் மாசிலாமணி நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in