சிதம்பரம் அருகே பணம் பறித்தவர் கைது

சிதம்பரம் அருகே பணம் பறித்தவர் கைது
Updated on
1 min read

சிதம்பரம் அருகே இளைஞரரை கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் பறித்தவரை போலீஸார் கைது செய்தனர்.

சிதம்பரம் அருகே உள் மேலகுண்டலபாடி கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன்(23). இவர் நேற்று முன்தினம் மாலை, மேலகுண்டலபாடி கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரை இறக்கத்தில், அதே பகுதியை கஜேந்திரன் (30) என்பவரை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி 3 பவுன் செயின் மற்றும் ரூ. 800 ஆகியவற்றை பறித்துசென்றுள்ளார்.

இது குறித்து கஜேந்திரன் அண்ணா மலைநகர் போலீஸில் புகார் செய்தார்.

இந்த நிலையில் நேற்றுஅண்ணாமலைநகர் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீஸார் வல்லம்படுகை சோதனைசாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற சிலம்பரசனை போலீஸார் கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். சிலம்பரசன் மீது பல வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in