மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் திருமா னூரை அடுத்த திருமழபாடி கிராமத்தில் உள்ள வைத்தியநாத சுவாமி கோயிலில் நிகழாண்டு மாசிமகப் பெருவிழா கொடியேற் றத்துடன் நேற்று தொடங்கியது.

இதையொட்டி, சுவாமிக ளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரா தனை நடைபெற்றது. தொடர்ந்து, கோயில் வளாகத்தில் அதிகார நந்திக்கு அருகில் உள்ள கொடி கம்பத்துக்கு மஞ்சள், சந்தனம், மாவுப்பொடி, திரவியப்பொடி, பன்னீர், இளநீர், தயிர், பால் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விநா யகர், சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி மற்றும் வள்ளி, தெய்வானை சமேத முருகன் உற்சவர்கள் கொடி கம்பம் அருகே எழுந்தருளிதும், மாசிமகப் பெருவிழா கொடி யேற்றம் நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in