அரியலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

அரியலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
Updated on
1 min read

32-வது சாலை பாதுகாப்பு மாதத் தையொட்டி, அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி அரியலூரில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஆர்.னிவாசன் தலைமை வகித்து, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத் தார்.

அண்ணா சிலை அருகே தொடங்கிய பேரணி, கடைவீதி, பெரம்பலூர் சாலை, திருச்சி சாலை வழியாக சென்று நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே நிறைவடைந்தது.

பேரணியில் பங்கேற்ற ஊர்க்காவல் படையினர் மற்றும் காவலர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in