கல்லூரி பேராசிரியர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கல்லூரி பேராசிரியர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பாக தமிழ்நாடு தகுதிபெற்ற கல்லூரி பேராசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதற்கு, கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் தினேஷ் கார்த்திக் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஏழுமலை, பொருளாளர் மேகநாதன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். அரசு கல்லூரி கவுரவ விரிவுரை யாளர்கள் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் பணி வரன்முறை செய்வதை நிறுத்த வேண்டும், பணி வரன்முறையில் தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் வாய்ப் பளிக்க வேண்டும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்ய வேண்டும்,என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி வேலூரில் உள்ள கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் முன்பாக நாளை (19-ம் தேதி) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in