அமமுக பிரமுகர் கொலை வழக்கில் 4 பெண்கள் உட்பட 7 பேர் கைது

அமமுக பிரமுகர் கொலை வழக்கில்  4 பெண்கள் உட்பட 7 பேர் கைது
Updated on
1 min read

திருப்பத்தூரில் அமமுக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பெண்கள் உட்பட 7 பேரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

திருப்பத்தூர் கவுதம்பேட்டை பகுதியைச் சேர்ந்த அமமுக மாவட்ட மாணவரணி செயலாளர் வானவராயன் (30). இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இது குறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், உயிரிழந்த வானவராயனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததால் அவரது குடும்பத்தார் ஒன்று சேர்ந்து கூலிப்படை மூலம் வானவராயனை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, கொலைக்கு முக்கிய காரணமாக விளங்கிய கவுதம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சங்கர் அவரது உறவினர்களான தனுஷ், ஆகாஷ், சவுந்தரி, ஷர்மிளா, வசந்தா மற்றும் சாந்தி ஆகிய 7 பேரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். மேலும். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in