மோட்டார் தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, திருநெல்வேலியில் சாலை போக்குவரத்து மோட்டார் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்: மு. லெட்சுமி அருண்
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, திருநெல்வேலியில் சாலை போக்குவரத்து மோட்டார் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்: மு. லெட்சுமி அருண்
Updated on
1 min read

திருநெல்வேலியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, சாலை போக்குவரத்து மோட்டார் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்க பொதுச்செயலாளர் மரியஜான் ரோஸ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

`பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். சுங்கச் சாவடிகளில் பொதுபோக்குவரத்து வாகனங்களுக்கு சலுகை அளிக்க வேண்டும். கால்டாக்சியில் மீட்டர் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். தொழிலாளர் நலவாரியத்தை முறைப் படுத்தி மோட்டார் தொழிலாளர்கள் அனைவரையும் வாரிய உறுப்பினர்களாக மாற்ற வேண்டும் ’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in