ஜல்ஜீவன் திட்டத்துக்கு பொது நிதியில் இருந்து பணம் ஒதுக்க எதிர்ப்பு

ஜல்ஜீவன் திட்டத்துக்கு பொது நிதியில் இருந்து பணம் ஒதுக்க எதிர்ப்பு
Updated on
1 min read

ஜல்ஜீவன் திட்டத்துக்கு 15-வது நிதிக் குழு மானியம், பொது நிதியில் இருந்து பணம் ஒதுக்க ஊராட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு கிராமப்புறங்களில் உள்ள அனைவருக்கும் 2024-க்குள் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்தை அறிவித்துள்ளது.

இத்திட்டத்தில் ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 55 லி. குடிநீர் வழங்கப்படும். கோடை காலங்களில் அதிகபட்சமாக 43 லி. வழங்கப்படும். கிராமப்புறங்களில் ஜல் ஜீவன் திட்டத்தில் 34 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஜல் ஜீவன் திட்ட நிதி மட்டுமின்றி, ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட 15-வது நிதிக்குழு மானியம், பொது நிதியைப் பயன்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஊராட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஊராட்சித் தலை வர்கள் கூறுகையில், ‘இத்தி ட்டத்துக்கு ஏற்கெனவே 2019-20-க்கு ரூ.373.10 கோடியை தமிழகத்துக்கு மத்திய அரசு விடுவி த்தது. மேலும் 2020-21-ம் ஆண்டுக்கு ரூ.917.44 கோடியை ஒதுக்கியது. ஆனால் இத்திட்ட நிதியை முறை யாகச் செலவழிக்கவில்லை. இதுகுறித்து ஏற்கெனவே மத்திய அரசு கண்டித்துள்ளது.

இதனால் திட்ட நிதியைப் பயன் படுத்தினாலே போதும். ஆனால், ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதியில் பணம் ஒதுக்கக் கூறுகின்றனர்.

இதனால் ஊராட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in