கரூர் அருகே விஷம் குடித்த காதல் ஜோடி காதலன் உயிரிழப்பு, காதலிக்கு சிகிச்சை

கரூர் அருகே விஷம் குடித்த காதல் ஜோடி காதலன் உயிரிழப்பு, காதலிக்கு சிகிச்சை
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம் பாறையை அடுத்த கன்னிமெய்க் கான்பட்டியைச் சேர்ந்தவர் முரு கேசன் மகன் அஜித்(18). அதே பகுதியைச் சேர்ந்தவர் ஜெய ராமன் மகள் சிவரஞ்சனி(19). கரூரில் உள்ள தனியார் கல்லூரி யில் பி.எஸ்சி 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தனர்.

இவர்களது காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வந்தனர். இதையடுத்து, கரூர் மாவட்டம் மணவாடி அருகேயுள்ள கத்தாளப்பட்டி அரசமரத்தான் கோயிலில் அஜித், சிவரஞ்சனி இருவரும் நேற்று திருமணம் செய்துகொண்டனர். பின்னர், அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் இருவரும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளனர். இதில் அஜித் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். சிவரஞ்சனி, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வெள்ளியணை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in