தொழிலதிபர் வீட்டில் திருடிய 6 பேர் கைது

தொழிலதிபர் வீட்டில் திருடிய 6 பேர் கைது
Updated on
1 min read

நாமக்கல் இந்திரா நகரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பொற்கோ (52). இவர் கடந்த அக்டோபர் மாதம் 3-ம் தேதி குடும்பத்தினருடன் புதுக்கோட்டைக்கு சென்றுள் ளார். மறுநாள் வீடு திரும்பி யபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.15 லட்சம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது. சம்பவம் தொடர்பாக நாமக்கல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நாமக் கல்லைச் சேர்ந்த ஜி.அமுதா (50), வெங்கடேசன் (30) தலைமையிலான 6 பேர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்கள் அளித்த தகவலின்பேரில் மோகனூரைச் சேர்ந்த டி.வெங்கடாசலம் (32), சரண்குமார் (30), பரமத்தியைச் சேர்ந்த டி.விக்னேஷ் (32), விருத்தாச்சலத்தைச் சேர்ந்த எம்.கணேஷ் (23) ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.12 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in