கள்ளக்குறிச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு

Published on

கள்ளக்குறிச்சியில் நெல் அறு வடை இயந்திர வாகனத்தின் மீதுபைக் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பக்ராஜலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பீர்பாஷா (24), மாபுபாஷா (30) மற்றும் அப்துல்ரகுமான். இவர்கள் 3 பேரும் கள்ளக்குறிச்சியில் தங்கி வேலை செய்து வந்தனர். கள்ளக்குறிச்சியிலிருந்து சங்கராபுரம் நோக்கி நேற்று அதி காலை 3 பேரும் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். கள்ளக்குறிச் சியை அடுத்த கோட்டைமேடு பகுதியில் எதிரே வந்த நெல்அறுவடை இயந்திர வாகனத்தின்மீது பைக் மோதி விபத்துக் குள்ளானது. இதில் மாபுபாஷா, பீர்பாஷா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த அப்துல்ரகுமான் சேலம் அரசு மருத்து மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸார் உயிரிழந் தவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கள்ளக் குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in