பேருந்து மோதியதில் தனியார் வங்கி ஊழியர் உயிரிழப்பு

பேருந்து மோதியதில் தனியார் வங்கி ஊழியர் உயிரிழப்பு
Updated on
1 min read

செய்யாறு அருகே தொழிற் சாலை பேருந்து மோதியதில் தனியார் வங்கி ஊழியர் உயிரிழந்தார்.

சென்னை எருக்கஞ்சேரி பகுதியில் வசித்தவர் ராமன் மகன் சதீஷ்(24). தனியார் வங்கி ஊழியர். இவர், சென்னையில் இருந்து செய்யாறுக்கு இரு சக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் இரவு வந்துள்ளார். காஞ்சிபுரம் – செய்யாறு சாலையில் உள்ள செல்லப் பெரும்புலிமேடு அருகே வந்தபோது, இரு சக்கர வாகனம் மீது தனியார் தொழிற்சாலை பேருந்து மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சதீஷ் உயிரிழந்தார். இதுகுறித்து தூசி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in