கிருஷ்ணகிரியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் காலியாக உள்ள பணிப் பார்வையாளர் மற்றும் இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடத்துக்கு இன்று (14-ம் தேதி) நடைபெறவிருந்த எழுத்துத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

கிருஷ்ணகிரியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் காலியாக உள்ள பணிப் பார்வையாளர் மற்றும் இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடத்துக்கு இன்று (14-ம் தேதி) நடைபெறவிருந்த எழுத்துத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
Updated on
1 min read

கிருஷ்ணகிரியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் காலியாக உள்ள பணிப் பார்வையாளர் மற்றும் இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடத்துக்கு இன்று (14-ம் தேதி) நடைபெறவிருந்த எழுத்துத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், காலியாக உள்ள பணிப் பார்வையாளர் மற்றும் இளநிலை வரைதொழில் அலுவலர் பதவிகளுக்கான 33 பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்படுகிறது. இதற்காக கடந்த டிசம்பர் மாதம் 23-ம் தேதி முதல் ஜனவரி 21-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் தகுதியான விண்ணப்பங்களுக்கு இன்று(14-ம் தேதி) காலை 10 மணி முதல் 12 மணி வரை, கிருஷ்ணகிரியில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எழுத்துத் தேர்வு நடைபெற இருந்தது. தற்போது இந்த எழுத்துத் தேர்வு நிர்வாக காரணங்களால் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in