கரூரில் சித்த மருத்துவ முகாம்

கரூரில் சித்த மருத்துவ முகாம்
Updated on
1 min read

கரூர் மாவட்ட நீதித்துறை மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு ஆகியவை கரூர் மாவட்ட சித்த மருத்துவத்துறையுடன் இணைந்து கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சித்த மருத்துவ முகாமை நேற்று நடத்தின.

மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவருமான எம்.கிறிஸ்டோபர் முகாமை தொடங்கிவைத்தார்.

திருச்சி மண்டல சித்த மருத்துவ இணை இயக்குநர் காமராஜ், சித்த மருத்துவத்தின் பயன்பாடு மற்றும் அதன் நன்மைகள் குறித்து விளக்கினார்.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சி.மோகன்ராம் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in