Published : 11 Feb 2021 03:14 AM
Last Updated : 11 Feb 2021 03:14 AM

டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு காங்கிரஸ் சார்பில் அஞ்சலி

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி டெல்லியில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த விவசாயிகளுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அரியலூரில் நேற்று மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அரியலூர் பேருந்து நிலையம் அருகே அக்கட்சியின் மாவட்டத் தலைவர் சங்கர், மாநில துணைத் தலைவர் ஜி.ராஜேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் சேகர், வி.கைகாட்டி பேருந்து நிலையம் அருகே அரியலூர் தெற்கு வட்டாரத் தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் கர்ணன், திருமானூர் பேருந்து நிலையம் அருகே வட்டாரத் தலைவர்கள் (கிழக்கு)சீமான், (மேற்கு) திருநாவுக்கரசு,நகர தலைவர் வினோத், தா.பழூர் பேருந்து நிலையம் அருகே வட்டாரத் தலைவர் சரவணன், மாவட்ட துணைத் தலைவர் சக்கரவர்த்தி உட்பட நிர்வாகிகள் பலர் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x