பள்ளிகொண்டா அருகே துணிகரம் அடுத்தடுத்த 5 வீடுகளில்தங்க நகைகள், பணம் திருட்டு

பள்ளிகொண்டா அருகே துணிகரம் அடுத்தடுத்த 5 வீடுகளில்தங்க நகைகள், பணம் திருட்டு
Updated on
1 min read

பள்ளிகொண்டா அருகே அடுத் தடுத்த 5 வீடுகளில் பணம், நகை களை திருடிய மர்ம நபர்களை காவல் துறையினர் தேடிவரு கின்றனர்.

வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அடுத்த சின்னசேரி பகுதியைச் சேர்ந்தவர் பொன்.பார்த்தசாரதி (48), இவரது வீட்டின் அருகே வசிப்பவர் ராணுவ வீரர் தேவேந்திரன் (40). இந்நிலை யில், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரின் திருமண நிகழ்ச்சி நேற்று முன்தினம் பள்ளிகொண்டாவில் நடைபெற்றது.

அதில், கலந்து கொள்ள தேவேந்திரன் குடும்பத்தார், பொன்.பார்த்த சாரதி, அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, அண்ணாமலை, சுப்பிர மணி ஆகியோர் தங்களது வீடுகளை பூட்டிக்கொண்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். நிகழ்ச்சி முடிந்து அன்றிரவு 10 மணியளவில் வீடு திரும்பியபோது, 5 பேரின் வீட்டின் பூட்டும் உடைக்கப் பட்டிருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது தேவேந்திரன் வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப்பொருட்கள் 20 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. பொன்.பார்த்தசாரதி வீட்டில் 3 பவுன் தங்க நகைகளும், 1.30 லட்சம் ரொக்கப்பணமும், அண் ணாமலை, சுப்பிரமணி, ஏழுமலை ஆகியோர் வீடுகளில் மொத்தமாக 3 பவுன் தங்க நகைகள், 15 ஆயிரம் ரொக்கப்பணம் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் நேற்று 5 பேரும் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துமர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

ஆட்டோ ஓட்டுநர் வீட்டில் திருட்டு

இதையடுத்து, அவர் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் வெளிக்கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகைகள், 10 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் ராஜவேல் புகார் அளித்தார். அதன்பேரில். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in