ரூ.9.45 கோடியில் வளர்ச்சி பணிகள் தொடக்கம்

ரூ.9.45 கோடியில் வளர்ச்சி பணிகள் தொடக்கம்
Updated on
1 min read

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளுக்கு திறப்பு விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோ. மலர்விழி தலைமை வகித்தார். கோட்டாட்சியர் ப.மணிராஜ் முன்னிலை வகித்தார்.

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, புதுப்பாளையம் அக்ரஹாரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.23 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடம் உள்பட ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.

இதுபோல் ரூ.9.45 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை அமைச்சர் பி. தங்கமணி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் தனலட்சுமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில், பள்ளிபாளையம் வட்டாட்சியர் தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in