Published : 10 Feb 2021 03:15 AM
Last Updated : 10 Feb 2021 03:15 AM

பிப்.15-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பிப்.15-ம் தேதி அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணிமுதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது.

முகாமில் அரியலூர், திருச்சி, சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வரும் தனியார் நிறுவனங்கள் பங்கு கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்யவுள்ளன. எனவே, 18 வயது முதல் 35 வரையிலான 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, பொறியியல் படித்த இளைஞர்கள் முகாமில் பங்கேற்று பயனடையலாம் என ஆட்சியர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x