தேனியில் அரசு ஊழியர்கள் கைது

தேனியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகே சாலை மறியலில்  ஈடுபட்ட அரசு ஊழியர்கள்.
தேனியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்.
Updated on
1 min read

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தொடர்ந்து சாலை மறியல் போரா ட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏழாம் நாளான நேற்று தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையம் முன் நடந்த மறியலுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் பெ.பேயத்தேவன் தலைமை வகித்தார்.

கோரிக்கை குறித்து ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர் பா.ராமமூர்த்தி விளக்கிப் பேசி னார்.

சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சீ.நிலவழகன், மாவட்ட நிர்வாகிகள் ஜானகி, ஆர்.முத்தையா உட்பட பலர் கலந்து கொண்டனர். 103 பெண்கள் உட்பட 113 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in