Published : 09 Feb 2021 03:14 AM
Last Updated : 09 Feb 2021 03:14 AM

விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மங்கல மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் மகன் வெங்கடேசன்(32). விவசாயி.

இவர், நேற்று முன்தினம் இரவு தனது இருசக்கர வாகனத்தில் கவுள்பாளையம் காளியம்மன் நகரைச் சேர்ந்த சடையன் மகன் கிருஷ்ணமூர்த்தி(34) என்பவரு டன் பெரம்பலூரிலிருந்து மங்கல மேடு நோக்கி சென்று கொண்டி ருந்தார்.

திருச்சி -சென்னை நெடுஞ்சா லையில் செங்குணம் பிரிவு சாலை அருகே சென்றபோது, இவர்களது இருசக்கர வாகனத் தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதிவிட்டு, நிற்காமல் சென்றுவிட்டது.

இந்த விபத்தில் அந்த இடத்திலேயே வெங்கடேசன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

விபத்து குறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x