Published : 09 Feb 2021 03:14 AM
Last Updated : 09 Feb 2021 03:14 AM

ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக, ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கி ணைப்பாளர்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்.

ஜாக்டோ- ஜியோ போராட் டத்தில் ஈடுபட்டதற்காக பணியிட மாறுதல் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரை அவர்கள் ஏற்கெனவே பணியாற்றிய இடங்களிலேயே மீண்டும் பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திர சேகர், சகாதேவன் ஆகியோர் தலைமை வகித்தனர். அமைப்பின் நிர்வாகிகள் ராஜேந்திரன், நீதி நாயகம், ஆரோக்கியராஜ், ரேணுகாதேவி, தியாகராஜன், உதுமான் அலி ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசினர்.

ஜாக்டோ- ஜியோ சார்பில் ஒருங் கிணைப்பாளர் மு.சுப்பிரமணியன் தலைமையில் கரூர் ஆர்.எம்.எஸ் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கெ.சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகி கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அரியலூர் அண்ணா சிலை அருகே ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் நேற்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப் பாட்டத்துக்கு, தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x