கல்விக் கட்டணத்தை குறைக்கக்கோரி பெருந்துறை மருத்துவ மாணவர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

பெருந்துறை மருத்துவக் கல்லூரி மாணவர்கள்  2-வது நாளாக நேற்று  வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருந்துறை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

கல்விக் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாணவர்கள் 2-வது நாளாக நேற்றும் வகுப்புகளை புறக்கணித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெருந்துறையில் போக்கு வரத்துத் துறையின் கீழ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. தற்போது கரோனா சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்டும் தனியார் மருத்துவக் கல்லூரி போல் கல்விக் கட்டணமாக ரூ.4 லட்சத்து 11 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. அரசு கல்லூரியில் வசூலிக்கும் ரூ.13 ஆயிரத்து 600 மட்டுமே கல்விக் கட்டணமாக கல்லூரி நிர்வாகம் வசூலிக்க வேண்டும் என மாணவ, மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர் தொடர்ந்து தமிழக அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இக்கோரிக்கையை முன்வைத்து நேற்று முன்தினம் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து நேற்றும் 2-வது நாளாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியின் முன்பு அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது தமிழக அரசு கல்விக் கட்டணத்தை குறைத்து உத்தரவு வழங்கும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in