Published : 07 Feb 2021 03:15 AM
Last Updated : 07 Feb 2021 03:15 AM

காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்

வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி, அரியலூர் மாவட்டம் திருமா னூரில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

திருமானூர் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு கட்சியின் வட்டாரத் தலைவர் சீமான்(கிழக்கு) தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் திருநாவுக்கரசு(மேற்கு), மாவட்ட மகளிரணித் தலைவர் மாரியம்மாள், நகரத் தலைவர் வினோத், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில செயலாளர் சுபசுந்தரசோழன் உட்பட பலர் கலந்துகொண்டர்.

தொடர்ந்து, போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x