மனுக்களில் ஆதார் எண் கட்டாயம்

மனுக்களில் ஆதார் எண் கட்டாயம்
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு வெளி யிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக காணொலி காட்சி மூலம் நடைபெற்று வந்தது. தமிழக முதல்வரின் ஆணையின்படி, கடந்த 1-ம் தேதி முதல் நேரடியாக மனுக்கள் பெறப்படுகின்றன.

திங்கள்தோறும் நடைபெறும் இந்த கூட்டங்களில் அளிக்கப் படும் மனுக்களில், ஆதார் எண் மற்றும் கைப்பேசி எண்களை கட்டாயம் குறிப்பிட வேண்டும். முகாமுக்கு வருவோர் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in