மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம் கட்டண வசூல் பணி பாதிப்பு

மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம்  கட்டண வசூல் பணி பாதிப்பு
Updated on
1 min read

மின் வாரிய அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

`மின்வாரியத்தை தனியார்மயம் ஆக்கக் கூடாது. மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும். நிறுத்தப்பட்ட பஞ்சப்படி, சரண்டர் ஊதியத்தை வழங்க வேண்டும். தரமான தளவாடப் பொருட்கள் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலயுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெற்றது.

தென்காசியில் மின்வாரிய அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் அயுப்கான் தலைமை வகித்தார். தொமுச கோட்ட செயலாளர் பெத்தேல், சிஐடியு கோட்ட செயலாளர் பச்சையப்பன் ஆகியோர் பேசினர். தென்காசி கோட்டத்தில் மொத்தம் உள்ள 320 ஊழியர்களில், 146 பேர் வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டதாக நிர்வாகிகள் கூறினர். இதனால், பல்வேறு பகுதிகளில் மின் கட்டண வசூல் பாதிக்கப்பட்டது. மின் விநியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in