தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை மஹோத்சவத்தை முன்னிட்டு, பாளையங்கோட்டையில் நடைபெற்ற பஞ்சரத்ன கீர்த்தனையில் பங்கேற்ற இசைக்கலைஞர்கள். படம்: மு.லெட்சுமி அருண்.
தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை மஹோத்சவத்தை முன்னிட்டு, பாளையங்கோட்டையில் நடைபெற்ற பஞ்சரத்ன கீர்த்தனையில் பங்கேற்ற இசைக்கலைஞர்கள். படம்: மு.லெட்சுமி அருண்.

தியாகராஜர் ஆராதனை: பாளை.யில் பஞ்சரத்ன கீர்த்தனை

Published on

சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 174-வது ஆராதனை மஹோத்சவத்தை முன்னிட்டு, பஞ்சரத்ன கீர்த்தனை உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் பாளையங்கோட்டை தியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்றன.

காலை 10.15 மணிக்கு சத்குருவின் திருவுருவச் சிலை கருவறையிலிருந்து மகா மண்டபத்துக்கு எழுந்தருளலும், தொடர்ந்து ஆராதனை, பஞ்சரத்ன கீர்த்தனை, 16 அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. காலை 11 மணி முதல் இரவு 9.30 மணிவரை சங்கீத வித்வான்களும், மாணவ, மாணவிகளும் பங்கேற்ற இசை நிகழ்ச்சிகளும், இரவு 9.30 மணி முதல் 10.30 மணிவரை ஆஞ்சநேயர் உற்சவ வழிபாடும் நடைபெற்றது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in