காவிரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

காவிரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
Updated on
1 min read

ஈரோடு மாவட்டம் சோலார் அருகேயுள்ள பாலுசாமி நகரைச் சேர்ந்தவர் ஷேக் அலாவுதீன். இவரது மகன் இப்ராஹிம் (11). இவர், தனது உறவினர்களுடன் மலையம்பாளையம் அருகேயுள்ள கருவேலம் பாளையத்திலுள்ள காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றார். ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்ற இப்ராஹிம் நீரில் மூழ்கி மாயமானார்.

தீயணைப்புத்துறையினர் அப்பகுதி மீனவர்கள் உதவியுடன் தேடினர். 10 கிலோ மீட்டர் தூரம் தொலைவில் கொடுமுடி அருகேயுள்ள ஊஞ்சலூர் பகுதியிலுள்ள பாறை இடுக்கில் சிக்கிக் கிடந்த சிறுவனின் சடலத்தை மீட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in