கடலூர் கடற்கரையில் ஆமை முட்டைகள் சேகரிப்பு

கடலூரில் சேகரிக்கப்பட்ட ஆமை முட்டைகளை தேவனாம்பட்டினம் ஆமை குஞ்சு பொறிப்பகத்தில் வனத்துறையினர் பாதுகாப்பாக வைத்தனர்.
கடலூரில் சேகரிக்கப்பட்ட ஆமை முட்டைகளை தேவனாம்பட்டினம் ஆமை குஞ்சு பொறிப்பகத்தில் வனத்துறையினர் பாதுகாப்பாக வைத்தனர்.
Updated on
1 min read

கடலூர் கடற்கரை பகுதியில் வனத்துறையினர் ஆமை முட்டைகளை சேகரித்து குஞ்சி பொறிப்பகத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.

கடலில் உள்ள ஆமைகள் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி,பிப்ரவரி மாதங்களில் கடற்கரை மணல் முட்டையிடும். ஆமைகளின் அழிவை தடுக்கும் வகையில் வனத்துறையினர் ஆமை முட்டைகளை சேகரித்து குஞ்சு பொறிப்பகத்தில் வைத்துபாதுகாக்கின்றனர். ஆமைக் குஞ்சுகள் பொறித்தவுடன் அதனை கடலில் விடுகின்றனர்.

இதன்படி மாவட்ட வன அலுவலர் அபிஷேக்தோமர் தலைமையில் வனசரக அலுவலர் அப்துல்ஹமீது, வனவர் குணசேகரன், வனக்காப்பாளர் மாரியப்பன், இயற்கை ஆர்வலர் செல்வா ஆகியோர் கொண்ட குழுவினர் கடலூர் கடற்கரை பகுதியில் ஆமை முட்டைகளை கடந்த சில நாட்களாக சேகரித்து வருகின்றனர். இது வரை 400 முட்டைகளுக்கு மேல் சேகரிக்கப்பட்டுள்ளது. சேகரிக்கப்பட்ட ஆமை முட்டைகள் கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள ஆமை குஞ்சு பொறிப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in