Published : 02 Feb 2021 03:17 AM
Last Updated : 02 Feb 2021 03:17 AM

சாராயம் விற்ற பெண் குண்டர் சட்டத்தில் கைது

சங்கராபுரம் அருகே கள்ளச் சாாராயம் விற்ற பெண் குணடர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சங்கராபுரம் வட்டம் சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மனைவி அலமேலு(42). இவர் மீது சங்கராபுரம் காவல் நிலையத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தல் மற்றும் காய்ச்சுதல் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவர் செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி எஸ்பி ஜியாவுல்ஹக் பரிந்துரையின் பேரில், ஆட்சியர் கிரண்குராலா, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அலமேலுவை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி அவர் நேற்று முன்தினம் அலமேலு கைது செய்யப்பட்டு கடலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக் கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x