எஸ்ஐ-க்கு மிரட்டல் விடுத்தவர் கைது

எஸ்ஐ-க்கு  மிரட்டல் விடுத்தவர் கைது
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள ஆவுடையாள்புரம் சாலையில் உதவி ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அந்தவாகனத்தில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்தபோது, உதவி ஆய்வாளர் முருகனை பணி செய்ய விடாமல் தடுத்து, அந்த நபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அழகனேரி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார்(40) என்ற அந்த நபரை திருவேங்கடம் போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in