ரத்ததான முகாம்

ரத்ததான முகாம்

Published on

தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி, திருவாரூர் தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பாமணி கிளை இணைந்து நடத்திய ரத்ததான முகாம் மாவட்டச் செயலாளர் யாசர் அரபாத் தலைமையில் பாமணியில் நேற்று நடைபெற்றது.

முகாமுக்கு, மாவட்ட துணைச் செயலாளர்கள் அசாருதீன், ஹாஜாமைதீன் மற்றும் மாவட்ட மாணவரணி ராஜா முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாவட்ட குருதி பரிமாற்று அலுவலர் மருத்துவர் வேல்முருகன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ரத்தம் சேகரிக்கும் பணியை மேற் கொண்டனர். இதில், 29 பேர் ரத்த தானம் அளித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in