பெரம்பலூரில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூரில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும் தனியார் வேலைவாய்ப்பு முகாம், சிறுவாச்சூரில் உள்ள ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நாளை(பிப்.1) நடைபெற உள்ளது.

இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. 8-ம் வகுப்பு முதல் பட்ட படிப்புவரை படித்தவர்கள், தொழிற்கல்வி பயின்றவர்கள் இம்முகாமில் பங்கேற்கலாம்.

மேலும், தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் கத்தார், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு நர்சிங், டர்னர், பிட்டர், மெசினிஸ்ட், மெக்கானிக் ஆகிய பிரிவுகளில் திறமை உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் சான்றிதழ்களுடன் நாளை(பிப்.1) காலை 8 மணி முதல் 3 மணி வரை ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் முகாமில் கலந்துகொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in