நெல்லையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாக த்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்க மாநில துணைத் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கீதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் படிகள் வழங்க வேண்டும். கரோனாவை பொருட்படுத்தாமல் பணியாற்றும் செவிலியர்களுக்கு அரசு அறிவித்த ஒரு மாத ஊக்க ஊதியம், பாதிக்கப்பட்ட செவிலியர்களுக்கு நிவாரணம், உயிரிழந்த செவிலியர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். 6 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப் பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in